Mar 7, 2026 - 09:17 PM -
0
இலங்கைக் கடற்படையினர் நாட்டின் தெற்கு திசையிலுள்ள ஆழ்கடலில் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகளை ஏற்றிச் சென்ற பலநாள் மீன்பிடி படகு ஒன்றைக் கைப்பற்றியுள்ளனர்.
இதன்போது குறித்த மீன்பிடி படகில் இருந்த 6 நபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பலநாள் மீன்பிடி படகு, போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொதிகள் மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகவும் சட்ட நடவடிக்கைகளுக்காகவும் கரைக்குக் கொண்டு வரப்படுவதாகக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.