Mar 8, 2026 - 06:32 PM -
0
குடும்பங்களின் அமைதி பொருளாதாம் கல்வி சுகாதாரம் உள்ளிட்ட பல விடயங்களை பாதிக்கும் மக்கள் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மதுபானசாலையினை அகற்றுமாறு கோரி சர்வதேச மகளிர் தினமான இன்று (8) போராட்டம் இடம்பெற்றது.
குறித்த போராட்டம் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகசேன அக்கரகந்த தோட்டத்திற்கு செல்லும் சந்தியில் இன்று காலை நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மதுபானசாலைகள் எமது அடையாளம் அல்ல எமது உழைப்பின் பாதியை சுரண்டும் மதுபானசாலை வேண்டாம் மதுவற்ற சமூகத்தை உருவாக்குவோம் போன்ற வசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை காட்சிப்படுத்தியவாறு மதுபானசாலை வேண்டாம், மூடுவோம் மூடுவோம் மதுபானசாலையை மூடுவோம் போன்ற கோசங்களை எழுப்பியவாறு அக்கரகந்த சந்தியிலிருந்து மதுசாலைவரை கவனயீர்ப்பு பேரணி ஒன்றினை முன்னெடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரதேசத்தில் வாழும் பெண்கள் இளைஞர்கள் உட்பட சுமார் 100 இற்கும் மேந்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
--
