Mar 10, 2026 - 02:13 PM -
0
வடிவேலு நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் உச்ச காமெடியனாக இருந்தவர். கடந்த சில வருடங்களாக அவரை காமெடியாக பார்க்க முடியவில்லை என்கிற வருத்தத்தில் தான் அவரது ரசிகர்கள் இருக்கிறார்கள்.
குசேலன் படத்திற்கு பின் வடிவேலு உடன் தனக்கு நடிக்க ஏராளமான படங்கள் வந்தும் வேண்டாம் என மறுத்துவிட்டேன் என நடிகை சோனா தற்போது பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
குசேலன் படத்திற்கு பின் 16 படம் வடிவேலுவுடன் நடிக்க கேட்டார்கள். ஆள விடுங்கடா சாமி என கூறி ஒரு படம் கூட ஒப்புக்கொள்ளவில்லை. என்னால் அவரை சமாளிக்க முடியவில்லை. அதை ஓப்பனாக பேச விரும்பவில்லை.
சுய மரியாதை தான் ரொம்ப அவசியம் எனவும் சோனா கூறி இருக்கிறார்.
