Header Logo

சினிமா
நடிகர் அஜித்குமார் துபாயில் இருந்து சென்னை திரும்பினார்!

Mar 10, 2026 - 06:15 PM -

0

நடிகர் அஜித்குமார் துபாயில் இருந்து சென்னை திரும்பினார்!

போர் பதற்றத்தால் துபாயில் சிக்கியிருந்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்குமார் பாதுகாப்பாக சென்னை திரும்பினார். 

மத்திய கிழக்கு நாடுகளில் திடீரென ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், துபாயில் இருக்கும் நடிகர் அஜித்குமாரின் பாதுகாப்பு குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு செய்திகள் வெளியாகின. 

துபாயில் தங்கியிருந்த அஜித்குமார் முற்றிலும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவருக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா உறுதிப்படுத்தியிருந்தார். போர் சூழலைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பான இடத்தில் தங்கியிருந்தார். 

கார் ரேஸில் பங்கேற்பதற்காக துபாய் சென்றிருந்த அஜித், ஏற்கனவே திட்டமிட்டபடி மார்ச் 1 ஆம் திகதி துபாயில் இருந்து சென்னை திரும்புவதாக இருந்தது. 

இருப்பினும், ஈரானியத் தலைவர் மீதான தாக்குதல் மற்றும் அதனைத் தொடர்ந்து துபாய் உள்ளிட்ட அண்டை நாடுகளின் வான்பரப்பில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல் காரணமாக, அவரது விமானப் பயணம் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களாக துபாயில் தங்கியிருந்த அஜித், சென்னை திரும்பியிருக்கிறார்.

Comments
0

MOST READ

காணொளி
மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

ஏற்கனவே சாய்ந்தமருது நகரசபை உருவாகி விட்டது!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

சிறுவர்களின் எச்சங்களும் மீட்பு!

title