Header Logo

வடக்கு
சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

Mar 10, 2026 - 07:01 PM -

0

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் கண்டாவளை பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில், அரசாங்கத்தின் 'வளமான கிராமம்' திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட காலநிலைக்கு அமைவான புதிய விவசாய பண்ணை திறந்து வைக்கப்பட்டது. 

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் “சமூகசக்தி” திட்டத்தின் கீழ், ஜப்பான் அரசாங்கத்தின் நிதி உதவியுடன் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP) வழங்கும் தொழில்நுட்ப மற்றும் நிதி ஆதரவுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

சுமார் 10 ஏக்கர் அளவிலான அரச காணியில் தெரிவு செய்யப்பட்ட 25 விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக, கிராமிய அபிவிருத்தி அமைச்சு 75,639,512.50 ரூபாவும், UNDP நிறுவனம் 14,518,686.52 ரூபா என நிதி செலவிடப்பட்டுள்ளது. 

இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுப்பிரமணியம் முரளிதரன், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரின் இணைப்பாளர் மருங்கன் மோகன், பிரதேச சபை உறுப்பினர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். 

இதன்போது, குறித்த பண்ணையில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்குத் தேவையான விவசாய உபகரணங்களும் அமைச்சரினால் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.

--

Comments
0

MOST READ

காணொளி
செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

நீதிமன்ற வளாகத்திற்கு அழைத்து வரப்பட்டார் அர்ச்சுனா

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

அகழ்வு பணிகள் இரண்டு கட்டங்களாக முன்னெடுக்க தீர்மானம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

title