Header Logo

மலையகம்
மரையை வேட்டையாடிய குற்றச்சாட்டில் இருவர் கைது!

Mar 11, 2026 - 11:12 AM -

0

மரையை வேட்டையாடிய குற்றச்சாட்டில் இருவர் கைது!

ஹட்டன் வனப்பகுதிக்குச் சொந்தமான நோட்டன் பிரிட்ஜ் ஒஸ்போன் வனப்பகுதியில் கம்பி பொறியைப் பயன்படுத்தி மரை ஒன்றினை வேட்டையாடி அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் அவை வெட்டிக் கொண்டிருந்த இரண்டு சந்தேக நபர்களையும் நேற்று (10) இரவு ஹட்டன் வனப்பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

குறித்த வனப்பகுதியில் ஏராளமான மான்கள் மற்றும் மரைகள் உள்ளது, இதனால் தொடர்ந்து இவ் இரண்டு சந்தேக நபர்களும் சுற்றித் திரியும் மரைகளை வேட்டையாட கம்பி வலைகளை பயன்படுத்தி பயன்படுத்தி மரை ஒன்றினை வேட்டையாடப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வனப்பகுதியில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது 54 கிலோ எடையுள்ள கம்பி வலை, இறைச்சி மற்றும் சந்தேக நபர்களைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட பல கத்திகள் மற்றும் வேட்டையாடிய மரையையும் பறிமுதல் செய்யப்பட்டதாக ஹட்டன் வனப்பாதுகாப்பு அதிகாரி கவிது ருக்ஷன் தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் நோட்டன் பிரிட்ஜ் ஒஸ்போன் பகுதியை சேர்ந்த 25 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர். 

விசாரணையின் பின்னர் இரண்டு சந்தேக நபர்களையும் இறைச்சியுடன் நேற்று ஹட்டன் மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, அவர்களை 18 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் மரை இறைச்சியை மண்ணெண்ணெய்யை பயன்படுத்தி அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

--

Comments
0

MOST READ

காணொளி
குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

title