Header Logo

மலையகம்
மரையை வேட்டையாடிய குற்றச்சாட்டில் இருவர் கைது!

Mar 11, 2026 - 11:12 AM -

0

மரையை வேட்டையாடிய குற்றச்சாட்டில் இருவர் கைது!

ஹட்டன் வனப்பகுதிக்குச் சொந்தமான நோட்டன் பிரிட்ஜ் ஒஸ்போன் வனப்பகுதியில் கம்பி பொறியைப் பயன்படுத்தி மரை ஒன்றினை வேட்டையாடி அதிக விலைக்கு விற்பனை செய்யும் நோக்கில் அவை வெட்டிக் கொண்டிருந்த இரண்டு சந்தேக நபர்களையும் நேற்று (10) இரவு ஹட்டன் வனப்பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் நோட்டன் பிரிட்ஜ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

குறித்த வனப்பகுதியில் ஏராளமான மான்கள் மற்றும் மரைகள் உள்ளது, இதனால் தொடர்ந்து இவ் இரண்டு சந்தேக நபர்களும் சுற்றித் திரியும் மரைகளை வேட்டையாட கம்பி வலைகளை பயன்படுத்தி பயன்படுத்தி மரை ஒன்றினை வேட்டையாடப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வனப்பகுதியில் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது 54 கிலோ எடையுள்ள கம்பி வலை, இறைச்சி மற்றும் சந்தேக நபர்களைக் கொல்லப் பயன்படுத்தப்பட்ட பல கத்திகள் மற்றும் வேட்டையாடிய மரையையும் பறிமுதல் செய்யப்பட்டதாக ஹட்டன் வனப்பாதுகாப்பு அதிகாரி கவிது ருக்ஷன் தெரிவித்தார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களும் நோட்டன் பிரிட்ஜ் ஒஸ்போன் பகுதியை சேர்ந்த 25 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என உத்தியோகத்தர்கள் தெரிவித்தனர். 

விசாரணையின் பின்னர் இரண்டு சந்தேக நபர்களையும் இறைச்சியுடன் நேற்று ஹட்டன் மாவட்ட நீதிபதி மற்றும் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது, அவர்களை 18 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

மேலும் மரை இறைச்சியை மண்ணெண்ணெய்யை பயன்படுத்தி அழிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!