Mar 11, 2026 - 07:37 PM -
0
ஈரானிலுள்ள தமது தூதரகத்தை தற்காலிகமாக மூடும் நாடுகளின் வரிசையில் சுவிட்சர்லாந்தும் இணைந்துள்ளது.
சுவிட்சர்லாந்து வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சுவிட்சர்லாந்து தூதுவர் மற்றும் ஐந்து பணியாளர்கள் தரைவழியாக ஈரானை விட்டு வெளியேறியுள்ளதுடன், அவர்கள் தற்போது பாதுகாப்பாக நாட்டின் எல்லைக்கு வெளியே உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்புச் சூழல் வழமைக்குத் திரும்பியவுடன் அவர்கள் மீண்டும் தெஹ்ரானுக்குத் திரும்புவார்கள் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
