Mar 13, 2026 - 10:26 AM -
0
ஈரானுக்கு தரைவழி அமெரிக்கப் படைகள் அனுப்பப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹம் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்தப் போர் இன்னும் பல வாரங்களுக்கு நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வோஷிங்டன் டி.சி.யில் செய்தியாளர்களிடம் பேசிய குடியரசுக் கட்சி செனட்டரான அவர், இந்த மோதல் இன்றோடு முடிவுக்கு வரும் என்று நான் நினைக்கவில்லை எனக் கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், ஈரானால் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப முடியாது என்பதையும், எங்களைத் தாக்கும் வகையில் ஏவுகணைகளை உருவாக்கும் திறனை அவர்கள் இழப்பதையும், அவர்கள் மீண்டும் அணுசக்தி விவகாரங்களில் ஈடுபடமாட்டார்கள் என்பதையும் உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும் என்றார்.
கடுமையான வெளியுறவுக் கொள்கைகளைக் கொண்டவராக அறியப்படும் கிரஹம், இது இன்னும் பல வாரங்களுக்குத் தொடரும், அதன் பின்னரே நாம் நிலைமையை மதிப்பீடு செய்வோம் என்றும் கூறினார்.
