Header Logo

சினிமா
துபாயில் மகளுடன் சிக்கிய 'உலக அழகி' நடிகை!

Mar 14, 2026 - 11:38 AM -

0

துபாயில் மகளுடன் சிக்கிய 'உலக அழகி' நடிகை!

துபாயில் மகளுடன் சிக்கிய உலக அழகி நடிகை இந்தியாவுக்கு வந்தது குறித்து தனது இன்ஸ்டாகிராமில் உருக்கமான வீடியோவை பதிவிட்டுள்ளார். 

இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, துபாய் உள்ளிட்ட பல நாடுகளின் வான் எல்லைகள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனால் பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 

இந்நிலையில், துபாயில் சிக்கிய நடிகை லாரா தத்தா சுமார் 12 நாட்கள் காத்திருப்புக்குப் பிறகு, வான்வழி போக்குவரத்து சீரானதை அடுத்து, இந்தியா திரும்பியுள்ளார். இதுகுறித்த இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள வீடியோவில், தான் ஒரு ஸ்டுடியோவில் இருந்தபோது திடீரென வெடிச்சத்தம் கேட்டதாகவும், மேலே இருந்து ஏவுகணைகள் இடைமறிக்கப்படுவதை கண்டதாகவும் நடிகை லாரா தத்தா சமீபத்தில் இன்ஸ்டாகிராம் வீடியோவில் தெரிவித்திருந்தார். 

மேலும் துபாயில் சிக்கித் தவித்த பின்னர் சமீபத்தில் இந்தியா திரும்பிய நடிகை சோனல் சவுகான், லாரா தத்தாவின் இன்ஸ்டாகிராம் வீடியோவில் அவரது பாதுகாப்புக்காக தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், நடிகை லாரா தத்தா துபாயிலிருந்து தனது 14 வயது மகள் சாய்ராவும் இந்தியா திரும்பியுள்ளார். "துபாயில், விமான நிலையத்தில் இருந்து வெறும் 10 கி.மீ தூரத்தில்தான் நாங்கள் தங்கியிருந்தோம். அங்கே தினந்தோறும் குண்டுகள் வீசப்பட்டன. அங்கிருந்து 2 மணிநேரம் காரில் பயணித்து, விமானம் பிடித்து திரும்பி வந்த அனுபவம் மிக கொடுமையானது. அந்த அதிர்ச்சியில் இருந்து என் மகள் வெளிவர ரொம்ப நாள் ஆகும்” என்று லாரா தத்தா கூறியுள்ளார். 

2000 ஆம் ஆண்டு நடந்த மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் லாரா தத்தா பட்டம் வென்றார். அதன் பிறகு திரை உலகிற்கு வந்து நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இவர் தமிழில் அரசாட்சி என்னும் படத்தில் நடித்தார். தற்போது பாலிவுட்டில் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தார். திருமணத்திற்குப் பிறகு திரைத்துறையில் இருந்து ஒதுங்கியிருந்தார். அதன்பின் மீண்டும் பெல்பாட்டம் என்ற படத்தின் மூலம் அக்சய் குமாருடன் ரீ-என்ட்ரி கொடுத்தார். இதில், அவர் இந்திரா காந்தி வேடத்தில் நடித்திருந்தார்.

Comments
0

MOST READ

காணொளி
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

title