Mar 16, 2026 - 09:52 AM -
0
எதிர்வரும் நாட்களில் எரிபொருளை முகாமைத்துவம் செய்து விநியோகிப்பதற்காக, அரசாங்கம் நேற்று (15) முதல் மீண்டும் நாடளாவிய ரீதியில் QR குறியீட்டு முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் காரணமாக ஹட்டன் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்று காலை முதல் வரிசைகள் காணப்பட்டன.
அரசாங்கம் இத்திட்டத்தை அமல்படுத்தியிருந்த போதிலும், சில எரிபொருள் நிலையங்களுக்கு இதற்கான வழிகாட்டல்கள் முறையாகச் சென்றடையாததால், நேற்று காலையில் வழக்கம் போல எரிபொருள் விநியோகிக்கப்பட்டது. எனினும், இம்முறைமை குறித்து கருத்து தெரிவித்த சாரதிகள்,
"உலகளாவிய நெருக்கடி நிலையில் இவ்வாறான திட்டங்கள் நல்லது. இது எரிபொருள் பதுக்கலைத் தடுத்து, அனைவருக்கும் தட்டுப்பாடின்றி எரிபொருள் கிடைக்க வழிவகுக்கும்" என தெரிவித்தனர்.
--
