Mar 17, 2026 - 04:12 PM -
0
தமிழ் சினிமாவில் காமெடி லெஜெண்ட்-ஆக திகழ்ந்து பல கொடி ரசிகர்கள் தன் பாடி லேங்குவேஜால் ரசிக்க வைத்து வருபவர் வடிவேலு. என்ன தான் வடிவேலுவை பற்றி பலர் புகழ்ந்து பேசினாலும் அவருடன் நடித்த சக நடிகர் நடிகைகள் வடிவேலுவை பற்றி உண்மையான முகத்தை வெளிப்படையாக தற்போது பேட்டிகளில் கூறிவருகிறார்கள். அந்தவகையில் நடிகர் கொட்டாச்சி அளித்த பேட்டியொன்றில் வடிவேலு பற்றி பகிர்ந்துள்ளார்.
அதில், பெண்ணின் மனதை தொட்டு படம் ரிலீஸாகி காமெடி செம்ம ஹிட்டானது. விவேக் சாருக்கு வடிவேலு போன் செய்து, ’என்னடா நீ வரவன எல்லாம் வளர்த்து விட்டுட்டு இருக்க’ என்று கேட்டார்.
அதற்கு விவேக் சார், அவர்களை யாரும் வளர்த்துவிடல, அவனோட திறமை, அவனுக்கு சினிமால சாப்பாடு கிடைக்கணும்னு எழுதி இருந்தா கிடைக்கும், நீயோ நானோ தடுக்கணும்னு நினைச்சா தடுக்க முடியாது.
அவங்க அவங்களோட திறமையில் வளர்கிறார்கள். பாவம்யா எல்லாரும், சினிமாவுக்காக குடும்பத்தை விட்டு பசி பட்டினியா இருந்து ரொம்ப கஷ்டப்பட்டு வந்து இருக்காங்கன்னு சொன்னாராம் என்று கொட்டாச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், அவர் மிகவும் மோசமானவர் என்றும் சக நடிகர்களுக்கு நடிப்பிற்கான சம்பளத்தை தயாரிப்பாளர்கள் கொடுத்தாலும் அதை வடிவேலுவே பிடிங்கி கொள்ளுவார். இவங்களுக்கு எதுக்கு இவ்வளவு சம்பளம் என்றும் கேட்பார்.
விவேக் அப்படிப்பட்டவர் கிடையாது. சக காமெடி நடிகர்களுக்கு அந்நாளுக்கான கூலியை அப்பவே கொடுக்க சொல்வார். விவேக் போல் வடிவேலு ஒரு காலமும் வரமாட்டார் என்று பேசியுள்ளார்.
