Header Logo

கிழக்கு
தொல்பொருள் மதிப்புள்ள பொருட்களுடன் ஐந்து பேர் கைது!

Mar 18, 2026 - 11:07 AM -

0

தொல்பொருள் மதிப்புள்ள பொருட்களுடன் ஐந்து பேர் கைது!

தொல்பொருள் மதிப்புள்ள பொருட்களுடன் முச்சக்கர வண்டியில் பயணித்த ஐந்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய, கடந்த 15 ஆம் திகதி மாலை அம்பாறை மாவட்டம், தெஹியத்தகண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சல்பிட்டிகம - சந்துன்புர வீதியில் பொலிஸார் வீதித் தடைகளை ஏற்படுத்திச் சோதனையில் ஈடுபட்டனர். 

இதன்போது, ஒரு முச்சக்கர வண்டியைச் சோதனையிட்ட பொலிஸ் குழுவினர், அதிலிருந்த தொல்பொருள் மதிப்புள்ள பொருட்களுடன் ஐந்து பேரைக் கைது செய்தனர். 

சந்தேக நபர்களிடமிருந்து ஒரு புத்தர் சிலை, நீலக்கற்கள் என சந்தேகிக்கப்படும் 3 கற்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்டவர்களில் மூவர் பெண்கள் என்பதுடன், ஒரு சந்தேக நபர் பொலிஸாரின் கைது நடவடிக்கையின் போது தப்பியோடியுள்ளார். 

ஆண் சந்தேக நபர்கள் பிபில மற்றும் மினிப்பே பகுதிகளைச் சேர்ந்த 32 முதல் 62 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், பெண் சந்தேக நபர்கள் மஹியங்கனை மற்றும் ரிதீமாலியத்த பகுதிகளைச் சேர்ந்த 26, 53 மற்றும் 55 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது. 

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேக நபர்கள் தெஹியத்தகண்டி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title