Mar 19, 2026 - 12:20 PM -
0
விசாரணை என்னும் பெயரில் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தலுக்கு கண்டனம் தெரிவிக்கும் முகமாக ஜனநாயக உரிமையை கோரி இன்று (19) விரிவுரைகளை புறக்கணித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை யாழ். பல்கலைக்கழக கலைப்பீடம் மாணவர் ஒன்றியம் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது, கடந்த பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கறுப்பு கொடி ஏற்றிய விவகாரம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மூன்று மாணவர்கள் குற்ற தடுப்பு பிரிவினரால் விசாரணைக்காக அழைத்தமையை கண்டித்து மாணவர்கள் விரிவுரைகளை புறக்கணித்து யாழ். பல்கலைக்கழக முன்றலில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
--
