Mar 20, 2026 - 09:56 AM -
0
ஹோர்முஸ் நீரிணையில் நிலவும் தடைகள் ஏப்ரல் இறுதி வரை தொடருமானால், ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 180 அமெரிக்க டொலர்கள் வரை உயரும் அபாயம் உள்ளதாக சவுதி அரேபிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 28 அன்று போர் தொடங்கியதிலிருந்து எண்ணெய் விலையில் பாரிய ஏற்ற இறக்கங்கள் காணப்படுகின்றன.
நேற்று பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாயின் விலை 119 டொலர்களை நெருங்கி, பின்னர் மீண்டும் குறைந்தது.
போரின் தன்மையை பொறுத்து ஒரு பீப்பாய் எண்ணெய் குறைந்தது 150 டொலர்களை எட்ட வாய்ப்புள்ளதாக சவூதி அரேபிய அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இந்த செங்கடல் முனையங்கள் தாக்கப்பட்டாலோ அல்லது செங்கடலுக்குள் ஏதேனும் தடைகள் ஏற்பட்டாலோ, எண்ணெய் விலை 150 டொலர்களுக்கும் மேல் அதிகரிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
