Header Logo

கிழக்கு
வைத்தியசாலைக்குள் புகுந்த காட்டு யானை!

Mar 20, 2026 - 10:28 AM -

0

வைத்தியசாலைக்குள் புகுந்த காட்டு யானை!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலை வளாகத்திற்குள் இன்று (20) அதிகாலை காட்டு யானை ஒன்று புகுந்தமையினால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இன்று அதிகாலை வேளையில் வைத்தியசாலைக்குள் நுழைய முயன்ற காட்டு யானையைத் தடுத்து நிறுத்த முயன்ற பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த காவலாளி ஒருவரை யானை தாக்க முற்பட்டுள்ளது. இதன்போது அவர் மிகச் சாமர்த்தியமாகச் செயற்பட்டு மயிரிழையில் உயிர் தப்பிய போதிலும், அவருக்குச் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகத் எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இந்தத் திடீர் ஊடுருவல் காரணமாக இன்று அதிகாலை வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளிகள், வைத்தியர்கள் மற்றும் ஏனைய உத்தியோகத்தர்கள் மத்தியில் பெரும் அச்சமும் பதற்றமும் நிலவியது. 

வைத்தியசாலை வளாகத்திலிருந்து வெளியேறிய காட்டு யானை, பிரதான வீதி ஊடாகச் சென்று தேற்றாத்தீவு பகுதிக்குள் நுழைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த யானையை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினரும், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் முன்னெடுத்து வருகின்றனர். 

காட்டுப் பகுதிகளில் இருந்து யானைகள் மீண்டும் நகரங்களை நோக்கி வரத் தொடங்கியுள்ளமை இப்பகுதி மக்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title