Mar 20, 2026 - 01:22 PM -
0
தெற்கு சிரியாவில் உள்ள இலக்குகள் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.
தெற்கு சிரியாவின் அஸ்-சுவைதா நகரில் வாழும் துரூஸ் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது.
சிரியாவில் உள்ள துரூஸ் மக்களுக்கு இழைக்கப்படும் தீங்குகளை இஸ்ரேல் பாதுகாப்புப் படை பொறுத்துக்கொள்ளாது.
அவர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கும், என்றும் அது மேலும் தெரிவித்துள்ளது.
சிரிய அரசாங்கத்திற்குச் சொந்தமான இராணுவ வளாகங்களில் உள்ள கட்டளை மையம் மற்றும் ஆயுதக் கிடங்குகள் ஆகியவையே தங்களது இலக்குகளாக இருந்ததாக இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது.
துரூஸ் என்பவர்கள் சிரியா, லெபனான், இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோலன் குன்றுகள் ஆகிய பகுதிகளில் வாழும் அரபு மொழி பேசும் சிறுபான்மையினர் என தெரிவிக்கப்படுகின்றது.
