Header Logo

சினிமா
என் நடிப்பை கிண்டல் செஞ்சாங்க!

Mar 20, 2026 - 02:54 PM -

0

என் நடிப்பை கிண்டல் செஞ்சாங்க!

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட்டிலும் நடித்து டாப் நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் கதாநாயகியாகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை ராஷ்மிகா மந்தனா. அவர் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளியாகவுள்ள நிலையில் கடந்த பிப்ரவரி 26 ஆம் திகதி நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ராஷ்மிகா. 

திருமண நிகழ்ச்சிகளுக்கு பின் தன்னுடைய படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டு வருகிறார் ராஷ்மிகா. இந்நிலையில், தெலுங்கானா கட்டர் ஃபிலிம் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார் ராஷ்மிகா. 

தி கேர்ள் ஃபிரெண்ட் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதினை ராஷ்மிகா பெற்றுள்ளார். விருதை பெற்றப்பின் பேசிய ராஷ்மிகா, எமோஷனலாக சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். 

அதில், ஒரு காலத்தில் என் நடிப்பிற்காக கிண்டல் செய்யப்பட்டேன். இப்போது என் நடிப்பிற்காக விருது கிடைத்துள்ளது. மிகப்பெரிய பாதையை கடந்து வந்ததை போன்று உணருகிறேன். 

தி கேர்ள் ஃபிரெண்ட் படம் மாதிரியான படத்திற்காக விருது கிடைத்துள்ளது மிகச்சிறப்பானது. ஏனென்றால் அது போன்ற நிறைய படங்கள் வருவதை அது ஊக்குவிக்கும், இப்படத்தை கொடுத்த ராகுலுக்கு நன்றி என்று ராஷ்மிகா பேசியிருக்கிறார்.

Comments
0

MOST READ

காணொளி
கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு!

கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு!

மன்னார் நகர சபை அதிரடி முடிவு!

மன்னார் நகர சபை அதிரடி முடிவு!

இன அழிப்பு செயல்பாடுகளை மகாவலி அதிகார சபை மேற்கொள்கிறது!

இன அழிப்பு செயல்பாடுகளை மகாவலி அதிகார சபை மேற்கொள்கிறது!

இலங்கை அரசின் கருத்து வேடிக்கையாக உள்ளது!

இலங்கை அரசின் கருத்து வேடிக்கையாக உள்ளது!

தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக கடனாளியாக இருக்கிறார்கள்!

தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக கடனாளியாக இருக்கிறார்கள்!

வைத்தியசாலைக்குள் புகுந்த காட்டு யானை!

வைத்தியசாலைக்குள் புகுந்த காட்டு யானை!

ரவூப் ஹக்கீம் பொய் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை!

ரவூப் ஹக்கீம் பொய் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை!

அரசாங்கம் அமெரிக்காவை கண்டித்து அறிக்கை வௌியிடவில்லை!

அரசாங்கம் அமெரிக்காவை கண்டித்து அறிக்கை வௌியிடவில்லை!

இந்த அரசாங்கம் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது!

இந்த அரசாங்கம் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது!

பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணி நேரம் விசாரணை!

பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணி நேரம் விசாரணை!

title