Mar 21, 2026 - 07:02 PM -
0
நெலுவ, மாதுகெட்ட பகுதியில் கிங் கங்கையில் மிதந்தவாறு இருந்த நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் பிடதெனிய, பட்டுவங்கள பகுதியைச் சேர்ந்த திருமணமானாத ஒருவராவார். கிடைத்த தகவலுக்கு அமைவாக செயற்பட்ட நெலுவ பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் முன்னதாக மனநலம் சார்ந்த பாதிப்புகளைக் கொண்டிருந்தவர் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நெலுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
