Header Logo

செய்திகள்
33 ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணம்: வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றி!

Mar 21, 2026 - 09:47 PM -

0

33 ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணம்: வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வெற்றி!

யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான 33 ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ணத்திற்கான 50 ஓவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. 

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது. அந்த அணி சார்பில் சங்கீத் 60 பந்துகளில் 45 ஓட்டங்களையும், உ.கென்றிக்சன் 51 பந்துகளில் 38 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் புனித பத்திரிசியார் கல்லூரி சார்பாக ம.ஸ்ரிப் ஆதித்யா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

நிணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணி 9 விக்கெட் இழப்பிற்கு 205 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. 

206 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலளித்தாடிய யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி அணி, 44.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 168 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது. அந்த அணி சார்பில் றொ.பேர்ளி டெனோவன் அதிகபட்சமாக 37 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். 

ஆட்டநாயகனாக யாழ்ப்பாணக்கல்லூரி அணிவீரர் சங்கீத் தெரிவனார். சகலதுறை ஆட்டநாயகனாக யாழ்ப்பாணக்கல்லூரி அணிவீரர் ஹரிசனும் சிறந்த பந்துவீச்சாளராக சென்பற்றிக்ஸ் கல்லூரி அணி வீரர் ஆதித்யாவும் சிறந்த துடுப்பாட்ட நாயகனாக யாழ்ப்பாணக் கல்லூரி அணிவீரர் சங்கீத்தும் சிறந்த களத்தடுப்பு வீரனாக சென் பற்றிக்ஸ் கல்லூரி அணி வீரர் டிலக்சனும் தெரிவானார்கள். 

இதுவரை நடைபெற்றுள்ள ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ண ஒருநாள் போட்டிகளில் புனித பத்திரிசியார் கல்லூரி 24 முறைகளும், யாழ்ப்பாணக் கல்லூரி 08 முறைகளும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ

காணொளி
கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு!

கடத்தப்பட்ட பெண் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்பு!

மன்னார் நகர சபை அதிரடி முடிவு!

மன்னார் நகர சபை அதிரடி முடிவு!

இன அழிப்பு செயல்பாடுகளை மகாவலி அதிகார சபை மேற்கொள்கிறது!

இன அழிப்பு செயல்பாடுகளை மகாவலி அதிகார சபை மேற்கொள்கிறது!

இலங்கை அரசின் கருத்து வேடிக்கையாக உள்ளது!

இலங்கை அரசின் கருத்து வேடிக்கையாக உள்ளது!

தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக கடனாளியாக இருக்கிறார்கள்!

தமிழ் மக்கள் பல ஆண்டுகளாக கடனாளியாக இருக்கிறார்கள்!

வைத்தியசாலைக்குள் புகுந்த காட்டு யானை!

வைத்தியசாலைக்குள் புகுந்த காட்டு யானை!

ரவூப் ஹக்கீம் பொய் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை!

ரவூப் ஹக்கீம் பொய் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை!

அரசாங்கம் அமெரிக்காவை கண்டித்து அறிக்கை வௌியிடவில்லை!

அரசாங்கம் அமெரிக்காவை கண்டித்து அறிக்கை வௌியிடவில்லை!

இந்த அரசாங்கம் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது!

இந்த அரசாங்கம் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது!

பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணி நேரம் விசாரணை!

பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணி நேரம் விசாரணை!

title