Mar 23, 2026 - 08:52 AM -
0
2026 ஆம் ஆண்டிற்கான உலக பயங்கரவாதக் குறியீட்டின் (Global Terrorism Index) படி, உலகளவில் பயங்கரவாதத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
கடந்த ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் காரணமாக 1,139 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதேவேளை, இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்கள் கணிசமாகக் குறைந்துள்ளதோடு, இது முந்தைய ஆண்டை விட 43 சதவீத வீழ்ச்சியாகும்.
இதற்கமைய, இந்தியா இப்பட்டியலில் 13-வது இடத்திற்கு முன்னேறியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
