Header Logo

கிழக்கு
அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

Mar 24, 2026 - 02:23 PM -

0

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வளத்தாப்பிட்டி வில்லுக்குளப் பகுதியில் நூற்றுக்கணக்கான யானைகள் முகாமிட்டுள்ளன. விளைச்சல் அறுவடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வயல்வெளிகளில் புதிதாக முளைக்கும் புற்களை உண்பதற்காக இந்த யானைக் கூட்டங்கள் அங்கு வருகை தருகின்றன. 

பெரிய யானைகள் மற்றும் குட்டிகள் எனச் சுமார் 100 இற்கும் மேற்பட்ட யானைகள் இன்று (24) காலை முதல் மாலை வரை இப்பகுதியில் உலா வந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

குட்டி யானைகள் துள்ளி விளையாடுவதையும், பெரிய யானைகள் புதிய புல் இனங்களை உண்பதையும் அப்பகுதி மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர். 

வயல்வெளிகளை நோக்கி வரும் யானைகள் ஊருக்குள் புகுந்துவிடாமல் இருப்பதற்காக, அங்கிருக்கும் பொதுமக்கள் சத்தங்களை எழுப்பி யானைகளைத் தடுத்தனர். 

மேலும் இப் பிரதேசத்தில் அண்மையில் வேளாண்மை அறுவடை மேற்கொள்ளப்பட்ட நிலையில் தீ வைக்கப்படுவதனாலும் அங்கு கொட்டப்படும் குப்பைகளை தினந்தோறும் 130 இற்கும் மேற்பட்ட யானைகள் உண்ணுவதற்கு வருகை தருவதுடன் அருகில் உள்ள பொதுமக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title