Header Logo

செய்திகள்
கணவனால் தீ மூட்டப்பட்ட மனைவி பலி

Mar 25, 2026 - 09:44 AM -

0

கணவனால் தீ மூட்டப்பட்ட மனைவி பலி

கொக்கட்டிச்சோலை பகுதியில் மண்ணெண்ணெய் ஊற்றி கணவனால் தீ வைக்கப்பட்டதாக கூறப்படும் மனைவி இரண்டு மாதங்களின் பின்னர் நேற்று (24) உயிரிழந்தார். 

கடந்த ஜனவரி 17ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில், காயமடைந்த குறித்தப் பெண் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார். 

அவர் 10 நாட்கள் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், வீடு திரும்பியிருந்தார். 

இந்த சம்பவம் தொடர்பில் குறித்தப் பெண்ணின் கணவன் கைது செய்யப்பட்டு, எதிர்வரும் ஏப்ரல் 26 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் வீட்டில் இருந்த பாதிக்கப்பட்டிருந்த குறித்த பெண், இரண்டு மாதங்களின் பின்னர் நேற்று உயிரிழந்தார். 

அவரது சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

120 மில்லியன் ரூபா செலவில்  உள்ளக விளையாட்டு அரங்கு!

120 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டு அரங்கு!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

title