Mar 25, 2026 - 12:44 PM -
0
நுவரெலியா, ஒலிபண்ட் பகுதியில் நேற்று (24) இரவு ஏற்பட்ட தீ வேகமாகப் பரவி நானுஓயா கிளாசோ தோட்டத்திற்கு மேல் பகுதியில் நடு காட்டுப் பகுதியில் இன்று (25) காலை கொழுந்து விட்டு எரிந்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை மூட்டமாக காட்சியளித்து வருகிறது.
இவ்வாறான சம்பவங்கள் விசமிகள் சிலரின் திட்டமிட்ட செயலாகும் காட்டுப் பகுதிகளில் வசிக்கும் விலங்குகளை வேட்டையாடுவதற்காக தீ வைப்பு சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.
தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில் மலையகத்தில் ஆங்காங்கே இதுபோன்ற தீ விபத்துகள் ஏற்பட்டு வருகிறது.
இவ்வாறு விசமிகள் சிலரின் திட்டமிட்ட செயலால் காட்டு மரங்கள் எரிந்து சாம்பலாவதுடன் காட்டில் உள்ள விலங்குகள், பறவை இனங்கள் பெரும் பாதிப்பு ஏற்பட்டு சுற்றுச் சூழலுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
--
