Mar 25, 2026 - 01:07 PM -
0
பொகவந்தலாவ, பெற்றசோ டெவன்போர்ட் தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று (25) மங்கள வாத்தியங்கள் முழங்க வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இன்று காலை 07.00 மணிக்கு மஹா கணபதி ஹோமம், புண்ணியாவாசனம், காயத்திரி மந்திரம், மூலமந்திரம் மற்றும் அஷ்டோத்திர சதநாம ஹோமம் ஆகியன இடம்பெற்றன.
விசேட தீபாராதனை மற்றும் தேவாரப் பாராயண கீதாஞ்சலி சமர்ப்பணம் செய்யப்பட்டன. சுப வேளையில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றதுடன், அதனைத் தொடர்ந்து மூலமூர்த்திகளுக்கும் இஷ்ட தெய்வங்களுக்கும் அபிஷேகங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கும்பாபிஷேகக் கிரியைகள் 'ஆகமப்பிரியன், அரும்பணிச் செல்வன்' சிவஸ்ரீ கணேஸ்வர குருக்கள் தலைமையில் நடைபெற்றன. இந்நிகழ்வில் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துகொண்டு அருளாசி பெற்றனர். வருகை தந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
--
