Header Logo

உலகம்
Meta நிறுவனத்துக்கு 375 மில்லியன் டொலர் அபராதம்!

Mar 25, 2026 - 04:09 PM -

0

Meta நிறுவனத்துக்கு 375 மில்லியன் டொலர் அபராதம்!

குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வதில் தோல்வியுற்றதாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டாவிற்கு அமெரிக்க நீதிமன்றம் 375 மில்லியன் டொலர் அபராதம் விதித்துள்ளது. 

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோவின் சாண்டா பே நீதிமன்றத்தில் கடந்த 6 வாரங்களாக நடந்து வந்த விசாரணையின் முடிவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

விசாரணையின்போது, மெட்டா நிறுவனம் தனது செயலிகளை குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற முறையில் வடிவமைத்ததோடு, பாலியல் சுரண்டல்களில் இருந்து சிறுவர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது, லாபத்திற்காக குழந்தைகளின் பாதுகாப்பை நிறுவனம் அடமானம் வைத்ததாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியது. 

மேலும் விசாரணையில், மெட்டாவின் முன்னாள் ஊழியர்கள் உட்பட 40 சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. நூற்றுக்கணக்கான உள்நாட்டு ஆவணங்கள் மற்றும் மின்னஞ்சல்கள் ஆதாரங்களாக சமர்ப்பிக்கப்பட்டன. 

விசாரணை முடிவில், அரசுத் தரப்பில் 2.2 பில்லியன் அபராதம் விதிக்க வலியுறுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றம் 375 மில்லியன் டொலர் அபராதம் விதித்துள்ளது. 

இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய போவதாக மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. 

தங்கள் தளங்களில் தவறான உள்ளடக்கங்களைக் கண்டறிந்து நீக்க கடுமையாக உழைத்து வருவதாக அந்நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title