Mar 26, 2026 - 01:11 PM -
0
மலையக கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை அமைப்பின் மூலமாக, கண்டி - கலஹா, தெல்தோட்டை குறுப் திருவள்ளுவர் வித்தியாலயத்திற்கு திருவள்ளுவர் சிலை கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது.
மலையக கல்வி மேம்பாட்டு அறக்கட்டளையின் தலைவர் நடேசன் சுந்தரேசனால், பாடசாலை அதிபர் எஸ். ஜோதிஸ்வரனிடம் இச்சிலை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பாடசாலை பிரதான மண்டபத்தில் திருவள்ளுவர் சிலைக்கு விசேட பூஜைகள் செய்யப்பட்டு சிலையினைத் திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எஸ். ஜோதிஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருவள்ளுவர் தொடர்பான சிறப்புச் சொற்பொழிவினை ஆற்றுவதற்காகப் பிரதம அதிதியாக இந்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் க. திலகவதி அம்மையார் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் அயல் பாடசாலைகளின் அதிபர்களான எஸ். ரவிச்சந்திரன், எஸ். தயாபரன், பி. சுரேஸ்குமார் மற்றும் கண்டி வலய ஆசிரியர் ஆலோசகர் கலாநிதி பிரபாகரன் ஆகியோருடன் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
--
