Header Logo

மலையகம்
கலஹா திருவள்ளுவர் வித்தியாலய பாடசாலைக்கு திருவள்ளூவர் சிலை அன்பளிப்பு

Mar 26, 2026 - 01:11 PM -

0

கலஹா திருவள்ளுவர் வித்தியாலய பாடசாலைக்கு திருவள்ளூவர் சிலை அன்பளிப்பு

மலையக கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை அமைப்பின் மூலமாக, கண்டி - கலஹா, தெல்தோட்டை குறுப் திருவள்ளுவர் வித்தியாலயத்திற்கு திருவள்ளுவர் சிலை கையளிக்கும் நிகழ்வு நடைபெற்றது. 

மலையக கல்வி மேம்பாட்டு அறக்கட்டளையின் தலைவர் நடேசன் சுந்தரேசனால், பாடசாலை அதிபர் எஸ். ஜோதிஸ்வரனிடம் இச்சிலை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, பாடசாலை பிரதான மண்டபத்தில் திருவள்ளுவர் சிலைக்கு விசேட பூஜைகள் செய்யப்பட்டு சிலையினைத் திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது. 

பாடசாலை அதிபர் எஸ். ஜோதிஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், திருவள்ளுவர் தொடர்பான சிறப்புச் சொற்பொழிவினை ஆற்றுவதற்காகப் பிரதம அதிதியாக இந்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் க. திலகவதி அம்மையார் கலந்துகொண்டார். 

இந்நிகழ்வில் அயல் பாடசாலைகளின் அதிபர்களான எஸ். ரவிச்சந்திரன், எஸ். தயாபரன், பி. சுரேஸ்குமார் மற்றும் கண்டி வலய ஆசிரியர் ஆலோசகர் கலாநிதி பிரபாகரன் ஆகியோருடன் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்!

மஹா கும்பாபிஷேகம்

மஹா கும்பாபிஷேகம்

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

அம்பாறையில் யானைகளின் அணிவகுப்பு

120 மில்லியன் ரூபா செலவில்  உள்ளக விளையாட்டு அரங்கு!

120 மில்லியன் ரூபா செலவில் உள்ளக விளையாட்டு அரங்கு!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

9 வருடங்களைத் தாண்டியும் இடமாற்றங்கள் வழங்கப்படவில்லை!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

ஏறாவூரில் இருவர் மீது சரமாரி வாள்வீச்சு!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் அல்ல!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

பணிப்பகிஷ்கரிப்பால் கிழக்கு மாகாணத்தில் கலவையான சூழல்!

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

அம்பாறையில் உச்சகட்ட பதற்றம்

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

பிரதேசவாதங்களை தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்!

title