Mar 28, 2026 - 09:13 AM -
0
கடந்த ஆண்டு போராட்டங்கள் மீதான கொடிய நடவடிக்கைகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பரில் சமூக ஊடகத் தடை காரணமாக வெடித்த கிளர்ச்சியின் போது, ஊழல் மற்றும் மோசமான பொருளாதார நிலைமைகளால் ஆத்திரமடைந்திருந்த போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு உட்பட பல்வேறு வன்முறைகளில் 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இந்த அமைதியின்மை குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு, முன்னாள் பிரதமர் ஒலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகக் ஆகிய இருவரையும் குற்றவியல் அலட்சியத்திற்காகத் தண்டிக்குமாறு பரிந்துரைத்ததை அடுத்து, ரமேஷ் லேகக்கும் கைது செய்யப்பட்டார்.
நேபாளத்தின் புதிய பிரதமராக முன்னாள் மேயரும் ரெப் பாடகருமான பாலேந்திர ஷா பதவியேற்ற மறுநாளே இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
