Header Logo
Mogo Academy

உலகம்
நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கைது

Mar 28, 2026 - 09:13 AM -

0

நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கைது
Mobitel inner

கடந்த ஆண்டு போராட்டங்கள் மீதான கொடிய நடவடிக்கைகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், நேபாளத்தின் முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி கைது செய்யப்பட்டுள்ளார். 

கடந்த செப்டம்பரில் சமூக ஊடகத் தடை காரணமாக வெடித்த கிளர்ச்சியின் போது, ஊழல் மற்றும் மோசமான பொருளாதார நிலைமைகளால் ஆத்திரமடைந்திருந்த போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூடு உட்பட பல்வேறு வன்முறைகளில் 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 

இந்த அமைதியின்மை குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு, முன்னாள் பிரதமர் ஒலி மற்றும் முன்னாள் உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகக் ஆகிய இருவரையும் குற்றவியல் அலட்சியத்திற்காகத் தண்டிக்குமாறு பரிந்துரைத்ததை அடுத்து, ரமேஷ் லேகக்கும் கைது செய்யப்பட்டார். 

நேபாளத்தின் புதிய பிரதமராக முன்னாள் மேயரும் ரெப் பாடகருமான பாலேந்திர ஷா பதவியேற்ற மறுநாளே இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

Mobitel Upahara