Mar 28, 2026 - 12:22 PM -
0
மலையகத்தில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வற்றி வருகின்றது. இதற்கமைய, நோர்டன் விமலசுரேந்திர மின் உற்பத்தி நிலையத்திற்கு நீர் வழங்கும் காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் இன்று (28) 40 அடி வரை குறைவடைந்துள்ளது.
தற்போதுள்ள நிலையில் நீர்மட்டம் மேலும் ஒரு அடி குறையுமானால், விமலசுரேந்திர மின் உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, மஸ்கெலியா மவுசாக்கலை, மேல் கொத்மலை மற்றும் கெனியன் ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் பெருமளவில் குறைவடைந்துள்ளது.
இந்தச் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் தமது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
--
