Header Logo

மலையகம்
காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 40 அடி வீழ்ச்சி

Mar 28, 2026 - 12:22 PM -

0

காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 40 அடி வீழ்ச்சி

மலையகத்தில் நிலவி வரும் கடும் வறட்சியான காலநிலை காரணமாக, பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக வற்றி வருகின்றது. இதற்கமைய, நோர்டன் விமலசுரேந்திர மின் உற்பத்தி நிலையத்திற்கு நீர் வழங்கும் காசல்ரி நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் இன்று (28) 40 அடி வரை குறைவடைந்துள்ளது. 

தற்போதுள்ள நிலையில் நீர்மட்டம் மேலும் ஒரு அடி குறையுமானால், விமலசுரேந்திர மின் உற்பத்தி நிலையத்தில் மின்சார உற்பத்தி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் சாத்தியம் உள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதேவேளை, மஸ்கெலியா மவுசாக்கலை, மேல் கொத்மலை மற்றும் கெனியன் ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் பெருமளவில் குறைவடைந்துள்ளது. 

இந்தச் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, பொதுமக்கள் தமது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சாரத்தைச் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!