Mar 30, 2026 - 07:37 AM -
0
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரயாதீவு பிரதேச வாவியை அண்டிய அடர்ந்த காட்டுப் பகுதியில் நீருக்கடியில் சூட்சூமமான முறையில் நீண்ட நாட்களாக இயங்கி வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
நேற்று (30) முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் 8 பீப்பாய்களில் இருந்த 800 லீட்டர் கோடா மற்றும் 160 லீட்டர் சட்டவிரோத மதுபானம் என்பன கைப்பற்றப்பட்டதுடன், அதனை தயாரிக்க பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி எ.எஸ்.எம்.ஏ. றஹீம் தலைமையிலான போலீஸ் குழுவினர் இந்த சுற்றிவளைப்பை முன்னெடுத்திருந்தனர்.
எவ்வாறாயினும் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பியோடிள்ளனர்.
--
