Apr 1, 2026 - 10:54 AM -
0
கம்பளை திருவருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தான பங்குனி உத்தர இரதோற்சவ விஞ்ஞாபன நிகழ்வுகள் நேற்று (31) ஆரம்பமாகின.
கம்பளை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் நேற்று இரவு வசந்த மண்டப பூஜைகளைத் தொடர்ந்து, அம்மன் தேரில் வீதியுலா வருகை தந்தார்.
இதன்போது விசேட பூஜைகள் நடைபெற்று, மேள வாத்தியங்கள் மற்றும் இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சிகளுடன் தேரோட்டம் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பெருமளவிலான பக்த அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
--
