Apr 1, 2026 - 05:45 PM -
0
பிரபல மலையாளத் திரைப்பட இயக்குநர் ரஞ்சித், பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நேற்று (31) மாலை கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
படப்பிடிப்பு தளம் ஒன்றில் தன்னை பாலியல் ரீதியாக தாக்க முயன்றதாக குற்றம்சாட்டி பெண் நடிகை ஒருவர் அளித்த புகாரை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர். இடுக்கி மாவட்டத்தில் இருந்து ரஞ்சித் கைது செய்யப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குனர் தன்னை ஒரு கேரவனுக்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றதாக அந்த நடிகை குற்றம் சாட்டியுள்ளார்.
ரஞ்சித்துக்கு எதிரான வழக்கு திங்களன்று கொச்சி நகர பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டது. அவர் தற்போது தொடுபுழாவில் பொலிஸ் காவலில் உள்ளார். விரைவில் அவர் கொச்சி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட வாய்ப்புள்ளது.
நடிகை மகளின் வாக்குமூலம் திங்கள்கிழமை மகளிர் பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, பொலிஸார் ரஞ்சித்தை கைது செய்தது. மலையாள திரையுலகில் நிகழும் துன்புறுத்தல் மற்றும் துஷ்பிரயோகம் குறித்த நீதிபதி கே. ஹேமா குழுவின் அறிக்கையில் வெளிவந்த தகவல்களை தொடர்ந்து, ரஞ்சித் முன்னதாக பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டிருந்தார்.
2024 ஆம் ஆண்டில், கொச்சி நகர காவல் ஆணையரிடம் ஒரு பெங்காலி நடிகை புகார் அளித்ததை அடுத்து, ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
