Apr 1, 2026 - 06:28 PM -
0
ஈரானிய தலைவர் போர்நிறுத்தத்தை விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் தமது ட்ருத் சமூக வலைத்தளத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
இன்று இரவு அமெரிக்க ஜனாதிபதி அந்நாட்டு மக்களிடையே ஆற்றவுள்ள உரைக்கு முன்னதாக குறித்த விடயத்தை பகிர்ந்துள்ளார்.
ஈரானின் புதிய ஆட்சிமுறை ஜனாதிபதி அமெரிக்காவிடம் போர்நிறுத்தம் கோரியுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எனினும், அந்த நபர் தனக்கு முன்னிருந்தவர்களை விட மிகக் குறைந்த தீவிரப்போக்குடையவர் மற்றும் அதிக புத்திசாலி என்று வர்ணித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை திறக்கப்பட்டு, தடையற்ற மற்றும் தெளிவான நிலை ஏற்படும் போது, அது குறித்துப் பரிசீலிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அதுவரை, நாம் ஈரானை அடியோடு அழிப்போம் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
