Apr 1, 2026 - 11:44 PM -
0
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும், மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியினருக்கும் இடையில் நாளை (2) சந்திப்பு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பானது ஜனாதிபதி செயலகத்தில் நாளை பிற்பகல் 2 மணியளவில் நடைபெறவுள்ளது.
அண்மையில் ஜனாதிபதிக்கும், மனோ கணேசனுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின் போது, ஜனாதிபதியினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைய இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிரதித் தலைவர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலுசாமி இராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏனைய சில முக்கியஸ்தர்களும் பங்கேற்கவுள்ளனர்.
மலையகத் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அவசரப் பிரச்சினைகள், வாழ்வாதாரச் சவால்கள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆராயப்படவுள்ளன.
