Header Logo

கிழக்கு
மோட்டார் சைக்கிள் விபத்தில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு!

Apr 2, 2026 - 12:08 PM -

0

மோட்டார் சைக்கிள் விபத்தில் 10 வயது சிறுவன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு - மயிலம்பாவெளி பிரதான வீதியில் நேற்று (01) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 10 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். 

மயிலம்பாவெளி விபுலானந்த வித்தியாலயத்தில் தரம் 6 இல் வகுப்பில் கல்வி கற்றுவந்த மகேந்திரன் ரயூவன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

மயிலம்பாவெளி கொம்புப் பிள்ளையார் ஆலயத்தில் நடைபெற்ற தீர்த்த உற்சவத்தின் பின்னர் தனது மூத்த சகோதரனுடன் வீடு நோக்கிச் சென்ற இச்சிறுவன் பிரதான வீதியைக் கடக்கின்றபோது மோட்டார் சைக்கிளில் மோதி உயிரிழந்துள்ளதாகத தெரிவிக்கப்படுகிறது. 

மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த மோட்டார் சைக்கிளில் இருவர் பயணம் செய்யததாகவும் இவர்கள் மட்டக்களப்பிலிருந்து பொலன்னறுவையிலுள்ள மரண வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தவேளை சிறுவன் திடீரென வீதியைக்கடக்க முற்பட்டபோது மோட்டார் சைக்கிளில் மோதுண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ்எம். நசிர் சம்பவ இடத்தைப் பார்வையிட்டதுடன் விசாரணைகளை ஆரம்பித்தார். 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title