Header Logo

மலையகம்
ஹட்டனில் பைனஸ் காட்டுக்கு தீ வைத்தவருக்கு 91,100/- அபராதம்

Apr 2, 2026 - 05:22 PM -

0

ஹட்டனில் பைனஸ் காட்டுக்கு  தீ வைத்தவருக்கு 91,100/- அபராதம்

நல்லதண்ணி, ஸ்ரீ பாத வீதியில் அமைந்துள்ள ரிக்கார்டன் வனக் காப்பகத்திற்கு சட்டவிரோதமான முறையில் தீ வைத்த சந்தேக நபர் ஒருவர், ஹட்டன் வனத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். 

நேற்று (01) கைது செய்யப்பட்ட சந்தேக நபர், இன்று (02) ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது, தான் செய்த குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார். 

இதனைத் தொடர்ந்து அவருக்கு ரூ. 91,100 அபராதம் விதிக்கப்பட்டது. 

அத்துடன், தீயினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டுத் தொகையையும் செலுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார். 

சந்தேக நபர் வைத்த தீயினால் வனப்பகுதியின் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பு முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. ஹட்டன் வனத்துறை அதிகாரிகள், மாஸ்கெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் நல்லதண்ணி பொலிஸார் இணைந்து கடும் போராட்டத்திற்கு மத்தியில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். 

தற்போது மலையகத்தில் நிலவும் வறட்சியான காலநிலையால் காட்டுத் தீ சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. மனிதர்களின் இத்தகைய பொறுப்பற்ற நாசகாரச் செயல்களால் காடுகள் அழிவதைத் தடுக்க விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வனப் பாதுகாப்பு அலுவலகத்தின் வன அதிகாரி வி.ஜே. ருக்ஷன் தெரிவித்துள்ளார்.

--

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!