Header Logo

செய்திகள்
3 கொலைகளுக்காக நால்வருக்கு மரண தண்டனை

Apr 2, 2026 - 06:58 PM -

0

3 கொலைகளுக்காக நால்வருக்கு மரண தண்டனை

நீண்ட காலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மூன்று வெவ்வேறு கொலை வழக்குகள் தொடர்பில், நான்கு சந்தேக நபர்களுக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 

மேல் நீதிமன்ற நீதிபதி விராஜ் வீரசூரியவினால் இன்று (02) இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார். 

1998 ஆம் ஆண்டு நாணுஓயா பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில், லிந்துலை மெரயா தோட்டத்தை சேர்ந்த 47 வயதுடைய குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

2009 ஆம் ஆண்டு பட்டிப்பொல பகுதியில் தனது தாய், மனைவி மற்றும் பிள்ளையைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட 55 வயதுடைய நபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

அதேநேரம் 1990 ஆம் ஆண்டு பொவந்தலாவ பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி ஒருவரைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட 64 மற்றும் 62 வயதுடைய இருவருக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

--

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது

MOST READ

காணொளி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

உயிரியல் தொழில்நுட்ப துறையில் மாவட்டத்தில் முதலிடம்!

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

நீதி கோரி கவன ஈர்ப்புப் போராட்டம்

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பௌதீகவியல் பிரிவில் சாதனை படைத்த கிளிநொச்சி மாணவன்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

பங்குனி உத்தர இரதோற்சவம்!

title