Apr 3, 2026 - 11:57 AM -
0
மிருகங்களை வேட்டையாடுவதற்காகக் கட்டி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி (கட்டுத் துப்பாக்கி) வெடித்ததில் காயமடைந்த நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இச்சம்பவம் பொல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (02) காலை 10.00 மணியளவில் குறித்த இடம்பெற்றுள்ளது. காயமடைந்த நபர் உடனடியாக நாவலபிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்துத் தெரியவருவதாவது,
மிருகங்களை வேட்டையாடுவதற்காகக் கட்டி வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியானது வெடித்துள்ளது, இதில் அங்கு விறகு சேகரித்துக் கொண்டிருந்த நபர் படுகாயமடைந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர் பொல்பிட்டிய, பிட்டவல பகுதியைச் சேர்ந்த 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாகப் பொல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
--
