Header Logo

உலகம்
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8 பேர் பலி

Apr 4, 2026 - 09:21 AM -

0

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 8 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் பிராந்தியத்தில் நேற்று (3) இரவு ரிக்டர் அளவுகோலில் 5.9 அலகாகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக காபூலில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும், ஒரு சிறுவன் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு தேசிய அனர்த்த முகாமைத்துவ அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

இந்த நிலநடுக்கம் பூமியின் அடியில் 177 கிலோமீட்டர் (110 மைல்) ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக ஜெர்மன் புவி அறிவியல் ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கமானது ஆப்கானிஸ்தான் தவிர, பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் இந்தியாவின் தலைநகர் புதுடெல்லி உள்ளிட்ட நகரங்களிலும் உணரப்பட்டுள்ளது. 

கடந்த நவம்பர் மாதமும் அந்நாட்டில் ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் 6.3 அலகாகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 27 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

ஹட்டனில் நவீன பேருந்துச் சேவை ஆரம்பம்!

தேவாலய சிலுவைப் பாதை!

தேவாலய சிலுவைப் பாதை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

ஜனாதிபதியிடம் மனோ விடுத்த கோரிக்கை!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

துஷ்டனை கண்டால் தூர விலகு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

தெல்லிப்பழை வைத்தியர் அவதூறு வழக்கு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை புத்தகமாக விற்றுப் பிழைக்கும் கம்மன்பில!

தேர்த்திருவிழா

தேர்த்திருவிழா

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

குருக்கள்மடம் அகழ்வுப் பணி தற்காலிகமாக நிறுத்தம்

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

கின்னஸில் இடம் பிடித்த பெண்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

அதிகமான நீர் ஆகாரங்களை எடுக்க வேண்டும்!

title