Header Logo

உலகம்
நிலவை நோக்கிய பயணத்தில் பாதி தூரத்தைக் கடந்தது ஆர்டெமிஸ் II!

Apr 4, 2026 - 03:01 PM -

0

நிலவை நோக்கிய பயணத்தில் பாதி தூரத்தைக் கடந்தது ஆர்டெமிஸ் II!

ஆர்டெமிஸ் II (Artemis II) செயற்திட்டமானது தற்போது தனது பயணத்தில் பாதியை விட அதிக தூரத்தை வெற்றிகரமாகக் கடந்துள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இந்த செயற்திட்டம் கடந்த ஏப்ரல் 02 ஆம் திகதி அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஆரம்பமானது.


விண்வெளி ஆய்வாளர்களை ஏற்றிச் சென்ற ஓரியன் (Orion) விண்கலம், பயணத்தைத் தொடங்கி சில மணிநேரங்களிலேயே ஸ்பேஸ் லாஞ்ச் சிஸ்டம் (SLS) ரொக்கெட்டிலிருந்து வெற்றிகரமாகப் பிரிந்தது. இந்த திட்ட குழுவினராக ரீட் வைஸ்மேன், விக்டர் க்ளோவர், ஜெரமி ஹேன்சன் மற்றும் கிறிஸ்டினா கோச் ஆகிய நான்கு விண்வெளி வீரர்கள் இணைந்துள்ளனர்.


ஆர்டெமிஸ் II குழுவினர் நிலவை நோக்கிப் பயணிக்கும் வேளையில் எடுத்த பூமியின் முதலாவது தெளிவான புகைப்படத்தை நாசா தற்போது வெளியிட்டுள்ளது. திட்டத்தின் கட்டளை அதிகாரி ரீட் வைஸ்மேன் என்பவரால் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படம் ''HELLO WORLD'' என அழைக்கப்படுகிறது.


பூமியின் பகல் மற்றும் இரவுப் பகுதிகள் தெளிவாகப் பிரிந்து தெரியும் அற்புதமான காட்சி வைஸ்மேனின் கேமராவில் பதிவாகியுள்ளது. இது குறித்துக் கனேடிய விண்வெளி வீரர் ஜெரமி ஹேன்சன் குறிப்பிடுகையில், "நிலவொளியால் ஒளிரும் பூமியின் இருண்ட பக்கத்தின் அழகான காட்சி தற்போது எமக்குத் தெரிகிறது. இது மிகவும் அற்புதம்!" எனத் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், இந்த நான்கு விண்வெளி வீரர்களும் விண்வெளியில் இருந்து கட்டுப்பாட்டு மையத்துடன் தொடர்பு கொண்டு தமது அனுபவங்களை விவரிக்கும் வீடியோ காட்சி தற்போது உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title