Header Logo

உலகம்
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Apr 4, 2026 - 07:07 PM -

0

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் தொலைதூரத்திலுள்ள வடக்கு தலாட் தீவுகளில் இன்று (04) 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. 

 

எனினும், உயிர்ச்சேதங்களோ அல்லது சொத்துச் சேதங்களோ ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 

 

பிலிப்பைன்ஸின் மிண்டானாவ் தீவிலுள்ள சரங்கானி மாகாணத்திற்கு தென்கிழக்கே சுமார் 90 கி.மீ தொலைவில், கடலுக்கு அடியில் 99 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. 

 

இந்த நிலநடுக்கம் "மிகவும் லேசாகவே உணரப்பட்டது" என்றும், காயங்கள் அல்லது சேதங்கள் குறித்து எந்த அறிக்கையும் கிடைக்கவில்லை என்றும் மாகாண பேரிடர் அதிகாரி ஹாரி சௌரோ ஏஎஃப்பி (AFP) செய்திய நிறுவனத்திடம் தெரிவித்தார். 

 

பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா மற்றும் அதன் அண்டை நாடுகள் பசிபிக் "நெருப்பு வளையத்தில்" (Ring of Fire) அமைந்துள்ளதால், அங்கு நிலநடுக்கங்கள் தினசரி நிகழும் ஒன்றாகவே உள்ளன. 

 

ஜப்பான் முதல் தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் படுகை வரை நீளும் இந்த வளையம், தீவிர நில அதிர்வு செயற்பாடுகளைக் கொண்ட ஒரு பகுதியாகும். இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று இந்தோனேசியாவின் வானிலை, காலநிலை மற்றும் புவி இயற்பியல் முகமை தெரிவித்துள்ளது.

 

 


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title