Apr 5, 2026 - 09:02 AM -
0
ஹோமாகம பகுதியில் இன்று காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.
வறண்ட வானிலையினால் நீர் விநியோகத்தை நிறுத்த நீர் வழங்கல் சபை தீர்மானித்திருந்ததுடன், இதன்படி 24 மணிநேர நீர்வெட்டை அமல்படுத்த முதலில் தீர்மானிக்கப்பட்டது.
எனினும், அந்த காலப்பகுதி பின்னர் 18 மணிநேரமாகவும், தற்போது 12 மணிநேரமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு மாவட்டத்தில் நீர் விநியோகத்திற்கு மேலும் தடைகள் ஏற்பட்டால், பவுசர்கள் மூலம் நீர் வழங்குவதற்கான விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய நீர் வழங்கல் சபை குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, ஏனைய மாவட்டங்களில் உள்ள நீர் வழங்கல் சபைக்கு சொந்தமான பவுசர்களை கொழும்பிற்கு கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார தெரிவித்தார்.
நீர் விநியோகத் தடையினால் தற்போது சுமார் 20,000 நீர் இணைப்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் பொறியியலாளர் சந்தன பண்டார மேலும் தெரிவித்துள்ளார்.
