Apr 5, 2026 - 05:46 PM -
0
ஈரானின் ஆழமான மலைப்பகுதிகளில் இருந்து, படுகாயமடைந்திருந்த மிகத் தைரியமான F-15 குழு உறுப்பினர்/அதிகாரி அமெரிக்காவினால் மீட்கப்பட்டுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி தமது Truth சமூக வலைத்தள பக்கத்தில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் இராணுவம் பெரிய எண்ணிக்கையில் அவரை தீவிரமாகத் தேடி வந்ததோடு, மிக நெருங்கியும் வந்தது.
அவர் மிகவும் மரியாதைக்குரிய ஒரு கேர்னல் ஆவார்.
மனிதர்களுக்கும் உபகரணங்களுக்கும் ஏற்படக்கூடிய ஆபத்து காரணமாக இத்தகைய திடீர் தாக்குதல் நடவடிக்கைகள் அரிதாகவே மேற்கொள்ளப்படுகின்றன.
இது பொதுவாக நடப்பதில்லை, பட்டப்பகலில் ஈரானின் வான்பரப்பில் ஏழு மணிநேரம் செலவிட்டு முதல் விமானியை மீட்கும் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்த இரண்டாவது மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைவரது தைரியம் மற்றும் திறமையின் அற்புதமான வெளிப்பாடு இது, திங்கட்கிழமை பிற்பகல் 1:00 மணிக்கு ஓவல் அலுவலகத்தில் இராணுவத்தினருடன் இணைந்து தாம் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் தாக்குதலில் அமெரிக்காவின் F-15 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நிலையில், அதில் இரண்டு விமானிகள் பயணித்திருந்தனர்.
