Apr 5, 2026 - 09:57 PM -
0
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இருவேறு கருத்துக்களை வௌியிட்டுள்ளார்.
ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் விரைவில் எட்டப்படாவிட்டால், ஈரானில் பாரிய தாக்குதல்களை நடத்தி, எண்ணெயைக் கைப்பற்றுவது குறித்துத் தாம் பரிசீலித்து வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதாக பொக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேநேரம், பொக்ஸ் நியூஸின் தலைமை வெளிநாட்டுச் செய்தியாளருடனான நேர்காணலில், நாளை ஒப்பந்தம் ஒன்று எட்டப்படுவதற்கான நல்ல வாய்ப்பு உள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
