Apr 7, 2026 - 12:16 PM -
0
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை திரிஷா பற்றிய விஷயங்கள் தான் இணையத்தில் பேசுபொருளாகி வருகிறார். அப்படி விஜய்யுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் இருந்து அவர் என்ன செய்தாலும், எங்கு சென்றாலும் அது விவாதம் செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில் நடிகை திரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு ஸ்டோரியை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், நான் படங்களை விட்டுவிட்டேன், ஒரு பணக்கார வியாபாரியை கல்யாணம் செய்து கொண்டேன், நேற்று தான் இரண்டாவது பிறந்தநாள் கொண்டாடி, 4 குழந்தைகளையும் வளர்ந்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஏதாவது சேர்க்க வேண்டுமா? இல்லை கற்பனை அளவு முடிந்துவிட்டதா என்று கூறியிருக்கிறார்.
தன்னைச் சுற்றி பகிரப்பட்டு விமர்சனங்கள் செய்திகள் குறித்துதான் திரிஷா இந்த பதிவினை போட்டுள்ளார் என்பது தெரிகிறது.
