Header Logo

மலையகம்
நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைவு!

Apr 8, 2026 - 04:56 PM -

0

நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைவு!

மலையகத்தின் பல பகுதிகளில், கடந்த சில மாதங்களாக நிலவி வரும் வரட்சி காரணமாக நீர் பிடிப்புப் பகுதிகளில் ஏற்படும் காட்டுத் தீ காரணமாக நீர்த்தேக்கத்திற்கான நீர் வரத்து குறைந்துள்ளது இதனால் காசல்ரீ, மவுசாகலை ஆகிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைவடைந்துள்ளது என நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியாளர்கள் தெரிவித்தனர். 

குறிப்பாக காசல்ரீ நீர்த்தேக்கம் அதன் முழு கொள்ளளவிலிருந்து அதிகமாகத் தாழிறங்கியுள்ளது. 

அதன்படி இன்று (08) காலை 6 மணி நிலவரப்படி மவுசாகலை நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் அதன் வழிந்தோடும் மட்டத்திலிருந்து 47 அடியாகவும், காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீர்மட்டம் 43.8 அடியாகவும் குறைந்துள்ளதாக பொறியாளர்கள் தெரிவித்தனர். 

இரு நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால், நீர்த்தேக்கம் நிர்மாணிக்கும் போது காணப்பட்ட பல இடிபாடுகளும் தீவுகளும் மீண்டும் மேலோங்கியிருப்பதோடு நீர்த்தேக்க பகுதிமணல் தரையாக மாறியுள்ளது. 

இரு நீர்த்தேக்கங்களிலிருந்தும் எடுக்கப்படும் நீர் நீர்மின் நிலையங்களில் மின்சாரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இரு நீர்த்தேக்கங்களிலிருந்தும் எடுக்கப்பட்ட நீரிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட பிறகு, அந்த நீர் களனி ஆற்றில் திறந்துவிடப்படுகிறது. 

நீரேந்து பகுதிகளில் மேலும் வரட்சியான காலநிலை நிலவும் பட்சத்தில் பாரிய நீர்த் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் இதனால் நீர் மின் உற்பத்தியில் பாரிய அளவில் பாதிப்படையலாம் எனவும் மின்சாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் இக்காலப் பகுதியில் பொதுமக்கள் நீரினை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!