Apr 8, 2026 - 10:23 PM -
0
இஸ்ரேல், இன்று (8) நடத்திய தாக்குதல் காரணமாக லெபனானில் 112 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த தாக்குல்களில் 837 பேர் காயமடைந்துள்ளதாக லெபனான் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கட்டிடங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் 2 வார காலம் போர் நிறுத்தம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் லெபனான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை நடத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
