Apr 9, 2026 - 12:22 PM -
0
சுகாதார அமைச்சு இணக்கம் தெரிவித்த நிபந்தனைகளை மீறி, பயிற்சிக்கு பிந்தைய வைத்திய நியமனங்களை வழங்கியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்று (09) காலை 8.00 மணி முதல் 48 மணி நேர வேலைநிறுத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையிலும் அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினராலும் இந்த பணிப்பகிஷ்கரிப்பு எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது வைத்தியசாலை வளாகம் முழுவதும் கறுப்பு கொடிகளை பறக்கவிட்டு தமது எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை அரச வைத்திய அதிகாரிகளின் இந்த எதிர்ப்பு போராட்டம் காரணமாக வெளிநோயாளர் பிரிவு முற்றாக செயலிழந்து காணப்பட்டது. மேலும் கிளினிக் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது, இதில் அவசர சிகிச்சை பிரிவுகள் தவிர்ந்த ஏனைய சாதாரண நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படும் நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் விபத்து, அவசர சிகிச்சை, மகப்பேறு என்பன வழமை போல் இயங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
--
