Header Logo

சினிமா
நஷ்ட ஈடு கேட்டு நாத்தனார் மீது ஹன்சிகா வழக்கு!

Apr 9, 2026 - 01:40 PM -

0

நஷ்ட ஈடு கேட்டு நாத்தனார் மீது ஹன்சிகா வழக்கு!

தமிழ், தெலுங்கு, இந்தி திரை உலகில் பிரபல நடிகையான ஹன்சிகா சினிமாவில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த போதே சோகைல் கதுரியா என்பவரை திருமணம் செய்தார். இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு சமீபத்தில் பிரிந்தனர். 

இந்நிலையில் ஹன்சிகாவின் முன்னாள் நாத்தனாரும் சின்னத்திரை நடிகையுமான முஸ்கான் நான்சி ஜேம்ஸ் மீது மும்பை திண்டோசி அமர்வு நீதிமன்றத்தில் ஹன்சிகா அவதூறு வழக்கு தொடர்ந்து உள்ளார். ஹன்சிகா புகார் மனுவில் தனது நாத்தனார் சமூக ஊடகங்களிலும் பிற இடங்களிலும் என் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயன்றுள்ளார். 

இதையொட்டி அவர் எனக்கு 2 கோடி ரூபா இழப்பீடும் பகிரங்க மன்னிப்பும் தெரிவிக்க வேண்டும். அவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடிக்கும் ஒரு மூன்றாம் தர நடிகை. அடிக்கடி விலை உயர்ந்த பைகள் மற்றும் வெளிநாட்டு பயணங்களில் படங்களை சமூக ஊடகங்களில் பதிவிடுகிறார். 

ஆனால் எனக்குத் தரவேண்டிய 27 லட்சம் ரூபா கடனை மட்டும் தராமல் திட்டவட்டமாக மறுத்து வருகிறார். கடனை திருப்பி செலுத்துவதை தவிர்ப்பதற்காக எனக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்தில் சமூக வலைதளங்களில் அவதூறான விஷயங்களை பேசத் தொடங்கியுள்ளார். 

இது ஒரு புறம் இருக்க முஸ்கான் நான்சி ஜேம்ஸ் தனது கணவரும் ஹன்சிகாவின் சகோதரர் மற்றும் ஹன்சிகா மீது கொடுமை மற்றும் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை கூறி வழக்கு பதிவு செய்துள்ளார். இதற்கு பதில் அளித்த ஹன்சிகா என் மீது துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் ஆதாரம் அற்றவை. இந்த முதல் தகவல் அறிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

பாராளுமன்றில் சரமாரியாக கேள்வி கேட்ட அர்ச்சுனா!

பாராளுமன்றில் சரமாரியாக கேள்வி கேட்ட அர்ச்சுனா!

இஸ்ரேல் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

இஸ்ரேல் தோல்வி அடையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகப்பெரிய பிரச்சினையாக எழுந்துள்ளது!

title