Header Logo

சினிமா
ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் கேட்ட அந்த கேள்வி!

Apr 14, 2026 - 06:08 PM -

0

ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் கேட்ட அந்த கேள்வி!

தமிழ் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் அதிகமாக பேசுபொருளாக மாறியவர் தான் ராதாரவி. நடிகர் விஜய்யுடன் 5 இற்கும் மேற்பட்ட படங்கள் ராதாரவி நடித்திருக்கிறார். 

குறிப்பாக அரசியலை மையப்படுத்தி எடுக்கப்பட சர்க்கார் படத்தில் வில்லன் ரோலில் நடித்திருப்பார்.

 

அப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த ஒரு சம்பவத்தை ராதாரவி சமீபத்திய பேட்டியொன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். 

அதில், ஒருநாள் ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய், என்னை தனியாக அழைத்து பேசினார். முதலில் சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தவர், ஒரு விஷயம் கேட்கணும், தப்பா நினைக்க மாட்டீங்களா என்று கேட்டார். அதற்கு நான் சம்மதித்ததும், அவர் கேட்ட கேள்வி எனக்கு அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் கொடுத்தது. 

எம்ஜிஆர் மீது நடந்த சூட்டிங் சம்பவத்திற்குப்பின் உங்கள் வீட்டில் என்ன நடந்தது, உங்கள் மனநிலை எப்படி இருந்தது, குடும்பத்தில் அந்த சூழ்நிலையை எப்படி சமாளித்தீர்கள் என்று கேட்டார். 

இதுவரைக்கும் யாரும் இப்படிப்பட்ட கேள்வியை கேட்டதே கிடையாது, யார் தப்பு, உங்கள் அப்பா ஏன் அப்படி பண்ணினார் என்று தான் கேள்விகள் கேட்பார்கள். ஆனால் விஜய் மட்டும் அந்த சம்பவத்தின் மனிதநேய பக்கம் பற்றி கேட்டார். 

விஜய் அப்பவே வித்தியாசமா யோசிப்பார், அவர் ஆரசியலுக்கு வர்றார் என்றதும் அவர் அதற்கு சரியான ஆள்தான் என்று நினைத்தேன் என ராதாரவி தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

title