Apr 15, 2026 - 11:26 AM -
0
ஹங்குரான்கெத்த, ஹேவாஹெட்ட ஹோப் கீழ் பிரிவு பிரதேசத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத் தேர் திருவிழா நடைபெற்றது.
ஆலயத்தில் பாற்குடப் பவனி எடுக்கப்பட்டு, அம்மனுக்கு விசேட அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவில் மூன்று தேர்கள் வீதியுலா வந்தபோது, மேள தாளங்கள் முழங்க, பக்தர்கள் "அரோகரா" கோஷங்களுடன் பக்திப்பரவசத்துடன் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
--
